நாய் கடித்த சிறுமிக்கு 9ம் தேதி அறுவை சிகிச்சை

 
நாய்

சென்னையில் நாய் கடித்து காயமடைந்த சிறுமிக்கு வரும் 9ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

tn

சென்னை ஆயிரம் விளக்கு மாதிரிப் பள்ளி சாலையில் உள்ள பூங்கா காவலாளியின் 5 வயது மகளை 2 வளர்ப்பு நாய்கள் கடித்துக் குதறின.  பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த காவலாளியின் மகள் சுதக்ஷாவை, புகழேந்தி என்பவரது 2 வளர்ப்பு நாய்கள் திடீரென கடித்துக் குதறின. சிறுமி அலறியதைக் கேட்டு காப்பாற்றிய தாய் சோனியாவையும் நாய்கள் கடித்துள்ளன. பலத்த காயமடைந்த சிறுமி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 5 வயது சிறுமியை கடித்துக் குதறிய ராட்வில்லர் வகை வளர்ப்பு நாய்களின் உரிமையாளர் புகழேந்தி மீது  போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இந்நிலையில்  நாய் கடித்து காயமடைந்த சிறுமிக்கு வரும் 9ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாட்டில் இருந்து மருத்துவர்கள் வர வேண்டியுள்ளதால் வியாழக்கிழமை அறுவை சிகிச்சை என்றும்  பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது நன்றாக இருப்பதாகவும், உயிருக்கு ஏதும் ஆபத்தில்லை எனவும் சிறுமியின் தந்தை தகவல் தெரிவித்துள்ளார்.