மெட்ராஸ் மாகாணம் ‘தமிழ்நாடு’ என பெயர் மாறிய வரலாறு தெரியுமா?
தமிழ்நாடு நாள் எவ்வாறு உருவானது தெரியுமா?
-
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சங்கரலிங்கனார், சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் வைக்கவேண்டும் என்று முதன்முதலில் தொடர் உண்ணாவிரதம் இருந்தார். இதில் 1956-ம் ஆண்டு அக்டோபர் 13 தேதி அவர் உயிர்நீத்தார்.
-
தமிழ்நாடு என்று பெயர் சூட்டவேண்டும் என்று திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 1957-ல் கொண்டுவந்த தீர்மானம் வாக்கெடுப்பு தோல்வி அடைந்துள்ளார்
-
1961 ஆம் ஆண்டு சோஷலிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை கொண்டு வந்த தீர்மானமும், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பூபேஷ் குப்தாவின் தனிநபர் மசோதாவும், 1963 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மற்றொரு தீர்மானமும் தோல்வி அடைந்துள்ளது.
-
1967 ஆம் ஆண்டு அண்ணா ஆட்சி பொறுப்பேற்ற பின் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை 'தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
1968 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் நாள் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்வதற்கான தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு, 1968 நவ.23 ஆம் நாள் தமிழ்நாடு பெயர் மாற்றம் நாடாளுமன்ற மசோதாவில் நிறைவேறியது.
-
1969 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி சென்னை மாகாணம் “தமிழ்நாடு” என்று பெயர் சூட்டப்பட்டது.
-
ஜூலை 18ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மான நாளைக் கொண்டாட வேண்டும் என்று 2021ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததன் அடிப்படையில் தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.


