திமுக இளைஞரணி மாநாடு - சுடர் தொடர் ஓட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர்

 
tn

தி.மு.க இளைஞர் அணி 2-ஆவது மாநில மாநாட்டின் சுடர் ஓட்டத்தை இளைஞர் அணிச் செயலாளரும், அமைச்சருமான  உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

tn

சேலத்தில் ஜனவரி 21-ஆம் தேதி, மாநில உரிமை மீட்பு முழக்கத்தோடு நடைபெறும் தி.மு.கழக இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாட்டின் நோக்கங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், இருசக்கர வாகன பேரணி, மாநாட்டுப் பாடல் வெளியீடு எனப் பல்வேறு நிகழ்ச்சிகளை இளைஞர் அணி மேற்கொண்டு வருகிறது. 

tn

இந்நிலையில் சேலம் மாநாட்டு திடல் நோக்கி சுடர் ஓட்டம் - சென்னையில் இருந்து தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.சேலத்தில் ஜனவரி 21ஆம் தேதி மாநாடு நடைபெறும் நிலையில், சென்னை அண்ணாசாலை சிம்சன் சந்திப்பு அருகே சுடர் தொடர் ஓட்டத்தை உதயநிதி தொடங்கி வைத்தார்.எல்.ஐ.சி. சந்திப்பு, ஸ்பென்சர் சந்திப்பு, அண்ணா மேம்பாலம், அறிவாலயம், அன்பகம், சைதாப்பேட்டை, கிண்டி கத்திபாரா, ஆலந்தூர், மீனம்பாக்கம், தாம்பரம் வழியாகச் செல்லும் மாநாட்டுச் சுடர் தொடர் ஓட்டம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் வழியாக 316 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து மாநாடு நடைபெறும் சேலம் மாவட்டத்தை 20.01.2024 அன்று பிற்பகல் 1.30 மணி அளவில் சென்றடைகின்றது. இளைஞர் அணிச் செயலாளர் அவர்கள் மாநாட்டுச் சுடரை, அன்று மாலையில் கழகத் தலைவரிடம் ஒப்படைக்கிறார்.