அண்ணா பல்கலைக்கழகம் முன் திமுக இளைஞரணி நாளை ஆர்ப்பாட்டம்!

 

அண்ணா பல்கலைக்கழகம்  முன் திமுக இளைஞரணி நாளை ஆர்ப்பாட்டம்!

அண்ணா பல்கலைக்கழகம் முன் திமுக இளைஞரணி நாளை ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அண்ணா பல்கலை., உறுப்புக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரி முன் துணைவேந்தர் சூரப்பாவை பதவிநீக்கம் செய்யவேண்டும் எனக்கோரி திமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகம்  முன் திமுக இளைஞரணி நாளை ஆர்ப்பாட்டம்!

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உயர் சிறப்பு அந்தஸ்து என்ற பெயரில் மாநில அரசிடம் இருக்கும் பல்கலைகழக உயர் கல்வி உரிமையை இழக்க சம்மதிப்பதாக இட ஒதுக்கீட்டிற்கும், மாநில நிதி உரிமைக்கும் எதிராக செயல்படும் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்யாமல் தமிழக அரசு இருக்க காரணம் என்ன? அமைதியாக இருந்து துணை போவதற்கு காரணமா? அடிமைத்தனமா? அண்ணா பல்கலைக்கழகம் மாநில அரசின் நிர்வாக கட்டுப்பாட்டிலேயே இறுதி வரை தொடர வேண்டும் என்ற முடிவை தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி நாளை தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைக்கழகம் , உறுப்பு கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் முன்பாக போராட்டம் நடத்தவுள்ளனர்.

மத்திய அரசிற்கு தன் கட்டுப்பாட்டில் ஏற்கனவே இருக்கும் பல்கலைக்கழகங்களை நடத்த முடியாத நிலையில் நன்றாக இயங்கிக் கொண்டிருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தை தமிழக அரசின் கையில் இருந்து பறித்துக் கொண்டு போய் மத்திய அரசின் காலடியில் கிடத்துவதற்காக சூரப்பா தவமாய் தவம் இருக்கிறார் .இதை திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞரணி, மாணவரணி ஒரு போதும் அனுமதிக்காது’ என்று குறிப்பிட்டுள்ளார்.