“வீடு வீடாக தானே செல்கிறோம், ஈபிஎஸ் போல அமித்ஷா வீட்டின் கதவை நாங்கள் தட்டவில்லை”- உதயநிதி ஸ்டாலின்

 
s s

கரூரில் புதிய பேருந்து நிலையத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். 

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “திமுகவினர் வீடு வீடாக வாக்கு சேகரிப்பதை எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். அவரைப் போல டெல்லியில் அமித்ஷா வீட்டின் கதவை நாங்கள் தட்டவில்லை. 2026ல் வரலாறு காணாத தோல்வியை எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்க மக்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். அடுத்த தலைமுறையை கருத்தில் கொண்டு முதலமைச்சர் திட்டங்களை கொண்டு வருகிறார். அதிமுக ஆட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயலிழந்து காணப்பட்டன. திமுக ஆட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் புத்துயிர் பெற்றுள்ளன. திமுக ஆட்சியில் புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டம் மூலம் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. 4 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் 18 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. காலை உணவு திட்டத்தை அறிமுகம் செய்தவர்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நியமிக்கப்பட உள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் 210 தொகுதி வெல்வோம் என்று கூறுகிறார். அதை மக்கள் தான் முடிவு எடுப்பார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலில் கழக அணி 200-க்கும் அதிகமான தொகுதிகளை வெல்ல, திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் முன்வரிசையில் நின்று களப்பணியாற்றிட வேண்டும்” என்றார்.