தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் திமுக குழு சந்திப்பு!

 
revanth reddy

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக ஆதரவு திரட்டும் வகையில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை திமுக குழு சந்தித்தது. 

நாட்டில் நாடாளுமன்ற தொகுதிகளை மக்கள் தொகையின் அடிப்படையில் மறு சீரமைப்பு செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசின் இந்த முடிவுக்கு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொகுதி மறுசீரமைப்பு நடந்தால் தமிழ்நாட்டில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என திமுக உள்ளிட்ட கட்சிகள் எண்ணுகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக 7 மாநில  பிரதநிதிகளை சந்தித்து ஆதரவு திரட்ட குழு அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக ஆதரவு திரட்டும் வகையில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை திமுக குழு சந்தித்தது. அமைச்சர் கே.என்.நேரு, திமுக எம்.பிக்கள் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை சந்தித்து, மார்ச் 22ம் தேதி சென்னையில் நடக்கும் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர்.