#BREAKING தஞ்சையில் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை

 
கொலை

தஞ்சாவூர் அருகே திமுக சட்டமன்ற உறுப்பினரின் சகோதரி மகன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் கலைவாணன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெய்குன்னம் கிராமத்தைச் சேர்ந்த் கலைவாணன் நேற்றிரவு வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச மின்மோட்டாரை இயக்க சென்றபோது மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். அவருக்கு வயது 30. திமுக ஆட்சியில் திமுகவினருக்கே பாதுகாப்பு இல்லாத அவலம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றனர்.