"எங்களது போராட்டம் தொடரும்" - கனிமொழி

 
s

இது ஜனநாயகம். இதில் மக்களின் தீர்ப்பே முக்கியமானது. அதை நாம் மதிக்க வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்பி, “இது ஜனநாயகம். இதில் மக்களின் தீர்ப்பே முக்கியமானது. அதை நாம் மதிக்க வேண்டும். மக்களின் தேர்வை நாங்கள் ஏற்கிறோம். புதிதாக அமையும் அரசுக்கும் விஜய்க்கும் என் வாழ்த்துகள். அரசில் அங்கம் வகிக்காததால் மக்களுடன் நிற்க முடியாது என்பதில்லை. மக்களுக்காக எங்கள் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம்” எனக் கூறினார்.