ஆளுநருக்கு இதயத்திற்கு பதிலாக களிமண் இருக்கிறதா? - ஆர்.எஸ்.பாரதி கடும் தாக்கு

 
rs bharathi

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய மறுக்கும் ஆளுநருக்கு இதயத்திற்கு பதிலாக களிமண் இருக்கிறதா? என திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடுமையாக விமர்சித்துள்ளார். 

தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் மு.க.ஸ்டாலின் 70ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ச்சியாக சீண்டி பார்க்கிறார், சனாதனம் பற்றி பேசுகிறார். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஆன்லைன் தடைசட்டத்தினை எதிர்க்கிறது, ஆகையால் தான் ஆளுநருக்கு வாய் இருக்கிறது, காது கேட்கவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். அதற்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை காது, வாய் முக்கியமில்லை இதயம் தான் முக்கியம் என்று தெரிவித்துள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாட்டு காரணமாக 44 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு இதயம் அனுமதிக்கிறதா?. ஒருவேளை ஆளுநருக்கு இதயத்திற்கு பதில் களிமண் இருக்கிறாதா?

rs

இதையெல்லாம் எடுத்து சொன்னால் திமுகவை மிரட்டும் பாணியில் அண்ணாமலை போன்றோர் பேசுகின்றனர். அண்ணாமலை வாயை திறந்து பேசுவதெல்லாம் பொய்யாகவே இருக்கிறது. அவருக்கேல்லாம் யார் ஐபிஎஸ் போஸ்டிங் கொடுத்ததுனு தேடுறன். பாஜக தமிழக அரசியலை வேறு விதமாக நடத்த பார்க்கிறது. திமுக ஆட்சியை ஏதாவது செய்யலாம் என்று பார்க்கின்றனர். திமுக ஆட்சி மீது கை வைத்தால் பாஜக வினர் தமிழகத்தில் இருக்கவே மாட்டார்கள், நான் சொல்லவில்லை, மக்கள் சொல்கின்றனர். மோடி யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் கதை முடிந்து விடும், சசிகலா, ஓ.பி.எஸ் தலையில் கை வைத்தார். இருவர் கதை முடிந்து விட்டது. நல்லவேளை எடப்பாடி பழனிச்சாமி தப்பித்து விட்டார். இவ்வாறு கூறினார்.