வரும் ஞாயிற்றுக்கிழமை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- துரைமுருகன் அறிவிப்பு

 
துரைமுருகன்

வரும் ஞாயிற்றுக்கிழமை திமுக‌ தலைவர்‌ மு.க.ஸ்டாலின்‌ தலைமையில்‌ தி.மு.க. மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்கள்‌ கூட்டம்‌ நடைபெற இருப்பதாக பொதுச்செயலாளர்‌ துரைமுருகன்‌ அறிவித்துள்ளார். 

ஆளுநர் ரவி-க்கும் ஆசை வந்திருக்கலாம்.. துரைமுருகன் விமர்சனம் – News18 தமிழ்

இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக‌ தலைவர்‌ மு.க.ஸ்டாலின்‌ தலைமையில்‌ தி.மு.க. மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்கள்‌ கூட்டம்‌ வருகிற 26-11-2023 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி அளவில்‌, சென்னை, தியாகராயர்‌ நகர்‌, “ஓட்டல்‌ அகார்டில்‌” நடைபெறும்‌. அதுபோது மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்கள்‌ அனைவரும்‌ தவறாமல்‌ கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்‌. கூட்டத்தில் தி.மு.க. இளைஞர்‌ அணி 2-வது மாநில மாநாடு மற்றும்‌ வாக்குச்‌ சாவடி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களின்‌ பணிகள்‌ குறித்து விவாதிக்கப்பட உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.