“வெல்லும் தமிழ்ப் பெண்கள்”- ஜன.19ம் தேதி திமுக டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு

 
“வெல்லும் தமிழ்ப் பெண்கள்”- ஜன.19ம் தேதி தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு “வெல்லும் தமிழ்ப் பெண்கள்”- ஜன.19ம் தேதி தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு

19.01.2026 - திங்கட்கிழமை  அன்று தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றிட, திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு முன்னிலையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி , எம்.பி., தலைமையில் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்”- தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ச்

இதுதொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தந்தை பெரியார்- பேரறிஞர் அண்ணா-முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் மகளிர் மேம்ப்பாட்டுக்கென தொடர்ச்சியான திட்டங்களை வகுத்து, 1.31 கோடி மகளிருக்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’, ‘விடியல் கட்டணமில்லா பேருந்துப் பயணம்’, கல்வி கற்கும் மாணவிகளுக்கு ‘புதுமைப் பெண் திட்டம்’, வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பாதுகாப்பான ‘தோழி விடுதி’, இந்தியாவிலேயே  அதிக அளவாக 43 சதவீதம் வேலைக்குப் போகும் பெண்களைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்வதற்கான சூழல் என மகளிர் மேம்பாட்டுக்காக தொடர்ச்சியான திட்டங்களை வகுத்து வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்கள் தலைமையில், கடந்த 29.12.2025 அன்று திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், “பார் சிறுத்ததோ, படை பெருத்ததோ” என்று சொல்லத்தக்க வகையில், “வெல்லும் தமிழ்ப் பெண்கள்”தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு கறுப்பு சிகப்பு மகளிர் அணி படையின் மாபெரும் எழுச்சியோடு  வெற்றிகரமாக நடைபெற்றதைத் தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்புரையாற்றிட – கழக முதன்மைச் செயலாளர் திரு.கே.என்.நேரு அவர்கள் முன்னிலையில், கழக துணைப் பொதுச்செயலாளர்  திருமதி  கனிமொழி கருணாநிதி , எம்.பி., அவர்கள் தலைமையில் கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, முனைவர் க.பொன்முடி, திருச்சி சிவா, எம்.பி., ஆ.இராசா, எம்.பி., அந்தியூர் ப.செல்வராஜ், எம்.பி.,  மு.பெ.சாமிநாதன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி -  கழக மகளிர் அணித் தலைவர் விஜயா தாயன்பன், மகளிர் அணிச் செயலாளர் திருமதி ஹெலன் டேவிட்சன், மகளிர் தொண்டர் அணிச் செயலாளர் நாமக்கல் ப.இராணி ஆகியோர் பங்கேற்பில் வருகிற 19.01.2026 திங்கட்கிழமை, மாலை 4.00 மணி அளவில், தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில்  “வெல்லும் தமிழ்ப் பெண்கள்”   தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெற உள்ளது.

மாவட்டக் கழகச் செயலாளர்/பொறுப்பாளர்களான மாண்புமிகு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மாண்புமிகு எஸ்.எஸ்.சிவசங்கர், மாண்புமிகு அன்பில் மகேஸ்பொய்யாமொழி, மாண்புமிகு எஸ்.ரகுபதி, மாண்புமிகு சி.வி.கணேசன், திரு.பூண்டி கே.கலைவாணன், எம்.எல்.ஏ., காடுவெட்டி திரு.தியாகராஜன், எம்.எல்.ஏ., திரு.க.வைரமணி, திரு.க.அன்பழகன், எம்.எல்.ஏ., திரு.வீ.ஜெகதீசன், திரு.நிவேதா முருகன், எம்.எல்ஏ., திரு.கே.கே.செல்லபாண்டியன், திரு.என்.கௌதமன், திரு.டி.பழனிவேல் அமைச்சர் பெருமக்களான  மாண்புமிகு கோவி.செழியன், மாண்புமிகு சிவ வீ.மெய்யநாதன், மாண்புமிகு டி.ஆர்.பி.ராஜா – நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு.அருண்நேரு, எம்.பி., திரு. முரசொலி, எம்.பி., மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்  ஆகியோர் இம்மாநாட்டினை ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்வார்கள். நிறைவாக,  தஞ்சாவூர் மத்திய மாவட்டச் செயலாளர் திரு.துரை.சந்திரசேகரன், எம்.எல்.ஏ., அவர்கள் நன்றியுரையாற்றுகிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.