இசைநிகழ்ச்சியில் குளறுபடி- அறச்சீற்றம் பொதுப் போராட்டங்களிலும் உருவாக வேண்டும்: தங்கர் பச்சான்

 
இனி உங்களின் படைப்பு மக்களிடத்தில் பேசிக்கொள்ளும்... ருத்ரதாண்டவம் படத்தைப் பாராட்டியுள்ள தங்கர் பச்சன்!

சமீபத்தில் சென்னையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் உள்ளே அனுமதிக்கப்படாமல் அவதிப்பட்டதுடன்,  கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை  ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் பொறுப்பேற்று மன்னிப்பு கோரினார்.  

ar-rahman-23

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக பல்வேறு திரைப்பிரபலங்கள் கருத்து தெரிவித்துவரும் நிலையில் இயக்குநர் தங்கர் பச்சான் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் அலைக்கழிக்கப்பட்டிருக்கும் மக்கள் கட்டுக்கடங்காத கோபத்தில் கிளர்ந்து எழுவதைக் காண முடிகிறது. தனிப்பட்ட முறையில் தங்களுக்கு சிக்கல் வந்தால் மட்டுமே கொதித்து எழும் மக்கள் பொது மக்களின் நலனுக்கான போராட்டங்களிலும் பங்கெடுக்க வேண்டும்.  இத்தகைய அறச்சீற்றம் பொதுப் போராட்டங்களிலும் உருவானால் அரசியல் கட்சிகளை மட்டுமே நாம் நம்பி இருக்க வேண்டியதில்லை! 


இது போன்ற நிகழ்வுகளை மட்டும் பணமாக்க நினைக்கும் ஊடகங்கள் மக்களிடத்தில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தத் தவறி விடுகின்றன. மக்களும் பொது நல சிந்தனையின்றி கண்டுகொள்ளாமல் ஒதுங்கி விடுகின்றனர். மக்களும் ஊடகங்களும் மனது வைத்தால் மட்டுமே அனைத்து மாற்றங்களும் நிகழும்! அதுவரை வெறும் புலம்பலிலேயே மக்கள் வாழ்வு முடிந்து போகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.