இயக்குநர் ராமதாஸ் மறைவு - சீமான் இரங்கல்
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும், எழுத்தாளருமான ராமதாஸ் மாரடைப்பு காரணமாக நேற்று இரவு காலமானார். ஆயிரம் பூக்கள் மலரட்டும், ராஜா ராஜா தான், நெஞ்சமுண்டு நேர்மை உண்டு, ராவணன் , வாழ்க ஜனநாயகம் , சுயவரம் ஆகிய படங்களை இயக்கிய இவர், எழுத்தாளராக பல படங்களில் பணிபுரிந்துள்ளார்.
அத்துடன் காக்கிச்சட்டை ,விசாரணை ,அறம் ,விக்ரம் வேதா ,மாரி 2 உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார். எழுத்தாளரும் நடிகருமான ராமதாஸின் இறுதி சடங்குகள் இன்று மாலை 5 மணி அளவில் அவரது இல்லத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த்திரைப்பட இயக்குநரும், சிறந்த திரைக்கலைஞருமான பேரன்பிற்குரிய அண்ணன் ஈ.ராமதாஸ் அவர்கள் மறைவெய்திய துயரச்செய்தியறிந்து பெரும் வேதனையுற்றேன்.
— சீமான் (@SeemanOfficial) January 24, 2023
அண்ணன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். pic.twitter.com/xDLqgZKkYv
தமிழ்த்திரைப்பட இயக்குநரும், சிறந்த திரைக்கலைஞருமான பேரன்பிற்குரிய அண்ணன் ஈ.ராமதாஸ் அவர்கள் மறைவெய்திய துயரச்செய்தியறிந்து பெரும் வேதனையுற்றேன்.
— சீமான் (@SeemanOfficial) January 24, 2023
அண்ணன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். pic.twitter.com/xDLqgZKkYv
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்த்திரைப்பட இயக்குநரும், சிறந்த திரைக்கலைஞருமான பேரன்பிற்குரிய அண்ணன் ஈ.ராமதாஸ் அவர்கள் மறைவெய்திய துயரச்செய்தியறிந்து பெரும் வேதனையுற்றேன். அண்ணன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.