தி.மலையில் ஜன 17, 18 தேதிகளில் பௌர்ணமி கிரிவலம் செல்ல தடை - ஆட்சியர் உத்தரவு...

 
திருவண்ணாமலை அண்ணாமலையாரை தரிசிக்க ஆதார் அவசியம்!

கொரோனா பரவல் காரணமாக  ஜன.17, 18 ஆகிய தினங்களில் பக்தர்கள்  கிரிவலம் செல்ல தடை விதித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

பிரசித்திபெற்ற  திருவண்ணாமலை  அண்ணாமலையார் கோயிலில்  ஒவ்வொரு மாதம் பௌர்ணமியின் போதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கிரிவலம் செல்வர்.  ஏற்கனவே  திருவண்ணாமலை அண்ணாமலையாரை தரிசிக்க வரும் பக்தர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் என  தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் ,  இந்த ஆண்டு  அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த  இந்த மாதம் பௌர்ணமியின் போது மக்கள் கிரிவலம் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை கிரிவலத்தில் பொதுமக்கள் பங்கேற்கத் தடை!
 
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில்: ”1973-ம் ஆண்டு குற்றவியல் நடைமுறை சட்டம் 144-ன் கீழ் தமிநாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக 31.01.2022 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. மேலும்ஜன.14 முதல் ஜன.18 வரை அனைத்து வழிபாட்டு தளங்களிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை எனவும் தமிழக அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு பௌர்ணமி தினங்களான ஜன.17 காலை 04.14 மணி முதல் ஜன.18 அதிகாலை 06.00 மணி வரை கிரிவலம் செல்ல பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை தர வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்  

திருவண்ணாமலை அண்ணாமலையாரை தரிசிக்க ஆதார் அவசியம்!

பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்தின் நோய் தொற்று பரவலை தடுக்கும் இத்தகைய முயற்சிக்கு ஒத்துழைப்பு அளித்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று முற்றிலும் இல்லை என்ற நிலையினை அடைய பொதுமக்கள் உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.