சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல அனுமதி!!

 
sathuragiri

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனி மாத பௌர்ணமி பூஜை – சதுரகிரி மலைக்கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்  அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில், ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கும்,  சதுரகிரி கோவிலில் பக்தர்கள் இரவில் தங்கவும் அனுமதி இல்லை . அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழையோ அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தாலோ மலையேறி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

sathuragiri

இந்நிலையில்  சதுரகிரி மலைக் கோயிலுக்கு செல்ல அனுமதி சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  வைகாசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு மே 20 முதல் 24 வரை செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.  பக்தர்கள் இரவில் தங்குவதற்கு அனுமதி அளித்துள்ளது. நீரோடைகளில் இறங்கி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.