செங்கல்பட்டு கள்ளச்சாராய பலி 7-ஆக உயர்வு

 
பலி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மேலும் 2 பேர் உயிரிழந்தனர்.

கள்ளச்சாராய பலி 12 ஆக உயர்வு!- Dinamani

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அடுத்த பெருங்கரணை, இருளர் பகுதியை சேர்ந்த  சின்னதம்பி, வசந்தா, வென்னியப்பன், சந்திரா மற்றும் மாரியப்பன் ஆகிய 5-பேர் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்துள்ளனர். மேலும் கவலைக்கிடமான நிலையில் மதுராந்தகம் அடுத்த பேரம்பாக்கம் மற்றும் பெருங்கரணை ஆகிய பகுதியை சேர்ந்த அஞ்சலை, தம்பு, சங்கர், அமாவாசை, முத்து ஆகிய 5-பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவந்தனர். இந்நிலையில் இன்று தம்பு, சங்கர் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அதே பகுதியில் அமாவாசை என்பவர் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் அவர் விற்பனைக்காக வைத்திருந்த ஏராளமான மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கள்ளச் சந்தையில் மது தயாரிப்பதற்காக வைத்திருந்த ரசாயன பவுடரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

முன்னதாக உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு சார்பில் 10-லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கி உள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தார். மேலும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் என்பது குறிப்பிடதக்கது.