மரக்காணம் கள்ளச்சாராயம் - பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு

 
MKstalin

விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த எக்கியார்குப்பத்தைப் சேர்ந்த ஆபிரஹாம் (47) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ttnt

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வம்பா மேடு பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.  இதை எக்கியார் குப்பம் மீனவர்கள் அருந்தியதாக தெரிகிறது. இதனால் ஆபத்தான முறையில் அவர்கள் மயங்கி விழுந்து உயிருக்கு போராடியுள்ளனர். இதை கண்ட  அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு முண்டியம்பாக்கம் புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனை ஆகியவற்றில் சேர்த்தனர். நேற்று வரை 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்கள் உடலுக்கு அமைச்சர்கள் பொன்முடி,  செஞ்சி மஸ்தான் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.  

கள்ளச்சாராயம் குடித்து ஆபத்தான நிலையில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயன், சங்கர், சரத்குமார் உள்ளிட்ட 5 பேர் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரித்தது. இந்நிலையில் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஆபிரகாம்(48) என்பவர் உயிரிழந்தார். இதன்மூலம் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.