காபி சூடாக இல்லை என சொன்ன மாமியாரை இரும்பு கம்பியால் தாக்கி கொன்ற மருமகள்

 
murder

மலைக்குடிபட்டியில் மாமியாரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த மருமகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

murder

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள மலைக்குடிபட்டியைச் சேர்ந்தவர் வேலு மனைவி பழனியம்மாள்(75). இவரது மருமகள் சுப்பிரமணி மனைவி கணகு(42). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு பழனியம்மாள் தனது மருமகள் கணகுவிடம் தேநீர் கேட்டுள்ளார். தேனீர் கொடுக்கும் போது ஏன் ஆறி போய் உள்ளது என்று கேட்டு மருமகளை திட்டியுள்ளார். 

இதில் ஆத்திரமடைந்த மருமகள் கணகு அருகில் கிடந்த சைக்கிள் பழுது நிற்கும் இரும்பு கம்பியை எடுத்து பழனியம்மாளை தலையில் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, விராலிமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனியம்மாள் உயிரிழந்தார்.  இதனைத் தொடர்ந்து இலுப்பூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பிவிட்டு மருமகள் கணகுவை கைது செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.