கடலூர் பாதாள சாக்கடை விவகாரம்- ஒப்பந்தம் ரத்து

 
பாதாள சாக்கடை

கடலூரில் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி பாதாள சாக்கடை கால்வாயில் இறங்கி அடைப்பை சரிசெய்த ஒப்பந்த  ஊழியரால் அப்பகுதி மக்கள் அதிருப்பி அடைந்தனர்.

கடலூரில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டது. உடனே கழிவு நீரை அகற்ற மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி பாதாள சாக்கடை கால்வாயில் இறங்கி அடைப்பை சரிசெய்தனர். இதுதொடர்பாக வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், மாநகராட்சியில் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் உபகரணங்கள் உள்ளதா? என்ற கேள்வி எழுந்தது. மேலும் ஆட்சியர், மாநகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தினர். மேலும் மாநில அரசின் மூலம் கொண்டுவரப்பட்ட மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் தடைச் சட்டம் திமுக ஆட்சியில் முறையாக பின்பற்றப்படவில்லை என்றும் கண்டனங்கள் எழுந்தது.


இதையடுத்து ஒப்பந்ததாரரை நேரில் அழைத்து கடலூர் மாநகராட்சி ஆணையர் அணு விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் ஒப்பந்ததாரரின் பதில் திருப்பி அளிக்காததால் அவரது ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்து உத்தரவிட்டார்