விவசாயிகள் எவ்வளவு கடன் பெற்றிருந்தாலும் ரூ.75,000 தள்ளுபடி செய்ய வேண்டும்- சண்முகம்
எவ்வளவு கடன் பெற்றிருந்தாலும் அனைத்து விவசாயிகளுக்கும் குறைந்தபட்சம் 75,000 ரூபாயாவது தள்ளுபடி என்று அறிவிப்பதுதான் விவசாயிகளுக்கு ஓரளவாவது திருப்தியை கொடுக்கும் என சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறியுள்ளார்.
பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் தனது எக்ஸ் தளத்தில், “விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக, இன்று சட்டப்பேரவையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தேர்தல் அறிக்கையில் சிறு, குறு விவசாயிகளுக்கு முழுமையாகக் கடன் தள்ளுபடி என்றும், மற்ற விவசாயிகளுக்கு அவர்கள் பெற்றுள்ள பயிர்க்கடனில் 50% தள்ளுபடி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் 75 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி என்றும், ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் பெற்ற விவசாயிகளுக்கு ஏற்கனவே அறிவித்தபடி 35 ஆயிரம் ரூபாய் மட்டுமே தள்ளுபடி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக, இன்று சட்டப்பேரவையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
— Shanmugam P (@Shanmugamcpim) August 17, 2026
தேர்தல் அறிக்கையில் சிறு, குறு விவசாயிகளுக்கு முழுமையாகக் கடன் தள்ளுபடி என்றும், மற்ற விவசாயிகளுக்கு அவர்கள் பெற்றுள்ள பயிர்க்கடனில் 50%… pic.twitter.com/stJq6ypNL4
எவ்வளவு கடன் பெற்றிருந்தாலும் அனைத்து விவசாயிகளுக்கும் குறைந்தபட்சம் 75 ஆயிரம் ரூபாயாவது தள்ளுபடி என்று அறிவிப்பதுதான் விவசாயிகளுக்கு ஓரளவாவது திருப்தியைக் கொடுக்கும். எனவே, இதை நிறைவேற்றத் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

