ஒன்றிய அரசின் செயல்பாடுகள் மர்மமாக உள்ளன - சிபிஐ முத்தரசன் பேச்சு

 
mutharasan

  நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் ஒன்றிய அரசின் செயல்பாடுகள் மர்மமாக உள்ளன என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார். 

சென்னை தலைமைச் செயலகத்தில், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, விசிக, மக்கள் நீதி மய்யம், கம்யூனிஸ்டு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளை சார்ந்த பிரமுகர்கள் கலந்துகொண்டனர். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் கலந்துகொண்டார். தென்னிந்திய மாநில பிரதிநிதிகள் அடங்கிய “கூட்டு நடவடிக்கை குழு” அமைப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

இந்த நிலையில், நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் ஒன்றிய அரசின் செயல்பாடுகள் மர்மமாக உள்ளன என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார். அனைத்துக்கட்சி கூட்டத்தில் இது தொடர்பாக பேசிய அவர், மத்திய அரசிடம் வெளிப்படைதன்மை இல்லை, எல்லாவற்றிலும் மர்மமாக உள்ளது. எதிர்காலத்தில் ஒரு ஆபத்து உள்ளது, அதை வரவிடாமல் தடுப்பதற்கான நடவடிக்கையை வரவேற்கிறோம் என கூறினார்.