சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி : முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்!!

 
vaccine

நாடு முழுவதும் 15-18 வயது வரையிலான 10 கோடி சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்குகிறது.

vaccine

கொரோனா, ஒமிக்ரான் தொற்று  அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.  அந்த வகையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கும் தடுப்பூசி  செலுத்த மத்திய அரசு முடிவு எடுத்தது. அதன்படி ஜனவரி 3ஆம் தேதி முதல் சிறார்களுக்கு தடுப்பூசி  செலுத்தப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இதற்கான இணையதள முன்பதிவு ஜனவரி 1-ஆம் தேதி தொடங்கியது.

vaccine

இந்நிலையில் தமிழகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை மாந்தோப்பில் உள்ள அரசு பள்ளியில் சிறார்களுக்கு  தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை இன்று  தொடங்கி வைக்கிறார். தொற்று பரவலை தடுக்கும் வகையில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதற்கான முன்பதிவை கோவின் இணையதளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.  தமிழ்நாட்டில் பள்ளிகளிலேயே முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  கோவின் செயலி மூலம் இதுவரை சுமார் 7 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.