மதுரையில் சற்று குறையும் கொரோனா பரவல் : பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,652 ஆக உயர்வு!
Jul 11, 2020, 10:08 IST1594442294000
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,680 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை1,30,261ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மதுரையில் இன்றுகாலை நிலவரப்படி மேலும் 170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அம்மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,652 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,250 ஆக உள்ள நிலையில் 4,131 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை மதுரை மாவட்டத்தில் 101 பேர் பலியாகியுள்ளனர். கடந்த மூன்று நாட்களாக மதுரையில் கொரோனா பரவல் சற்று குறைந்து வருவது கவனிக்கத்தக்கது.