வேலூர் மாவட்டத்தில் மேலும் 148 பேருக்கு கொரோனா : மொத்த பாதிப்பு 2,922 ஆக உயர்வு!

 

வேலூர் மாவட்டத்தில் மேலும் 148 பேருக்கு கொரோனா : மொத்த பாதிப்பு 2,922 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,965 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,34,226 ஆக அதிகரித்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் மேலும் 148 பேருக்கு கொரோனா : மொத்த பாதிப்பு 2,922 ஆக உயர்வு!

நேற்று மட்டும் 69 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். 18 பேர் தனியார் மருத்துவமனையிலும், 51 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,898 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 76,158 ஆக உயர்ந்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் மேலும் 148 பேருக்கு கொரோனா : மொத்த பாதிப்பு 2,922 ஆக உயர்வு!

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் மேலும் 148 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,922 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தொற்று பாதிப்பிலிருந்து இதுவரை 1,293 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.