கே.என்.நேரு தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பு

 
tn

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடர்பான அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என்று  எதிர்பார்க்கப்படும் நிலையில்  அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஆயத்தம் காட்டி வருகின்றன. அந்த வகையில் திமுக நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது.

duraimurugan

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 3 சிறப்புக் குழு அமைத்தது திமுக.  தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும்; தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும்; தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் 3 குழுக்களை அமைத்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 

tt
இந்நிலையில்  அமைச்சர் கே. என். நேரு தலைமையில்  தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்புக் குழுவில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி , அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர்  இடம்பெற்றுள்ளனர்.