அடுத்த பேரிடி.... சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.50 உயர்வு
Apr 7, 2025, 17:29 IST1744027182815

வீட்டு பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.50 உயர்வு என பெட்ரோலியத் துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதையடுத்து மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுபவர்களுக்கு ரூ.853க்கு விற்பனை செய்யப்படும். உஜ்வாலா திட்டம் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுவோருக்கு ரூ.550 ஆக விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை இம்மாதம் ரூ.43.50 குறைக்கப்பட்டிருந்தது. கடந்த மாதம் ரூ.1,965 ஆக இருந்த விலை தற்போது ரூ.1,921.50 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.