நாகை மாவட்டத்தில் பேரிடர் பாதிப்பு குறித்த புகார்களுக்கு இந்த எண்ணை அழையுங்கள்!

 
rain

நாகை மாவட்டத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  மாவட்ட நிர்வாகம் சார்பில் பேரிடர் பாதிப்பு புகார்களை தெரிவிக்க கட்டுபாட்டு அறை தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமி்ழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி  காரணமாக தமிழகத்தில் இன்று  கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. 

இந்த நிலையில், நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில் பேரிடர் பாதிப்பு குறித்த புகார்களை தெரிவிக்க கட்டுபாட்டு அறை தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நாகையில் பேரிடர் பாதிப்பு குறித்த புகார்களை தெரிவிக்க  கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.  1077,   04365 251992 என்ற இலவச தொலைபேசி எண்கள் வாயிலாக புகார் தெரிவிக்கலாம். மேலும்  8438669800 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும்,  செவித்திறன் பாதிக்கப்பட்டவர்கள் 9487550811 என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.