“இந்தியக் கூட்டணிக்கு வாக்களியுங்கள்; காங்கிரஸுக்கு வாக்களியுங்கள்”- ராகுல்காந்தி

 
ராகுல் காந்தி

காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு தமிழ்நாட்டில் சமூக நீதிக்கான ஒரு பெருமைமிக்க வரலாறு உண்டு என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக ராகுல்காந்தி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு தமிழ்நாட்டில் சமூக நீதிக்கான ஒரு பெருமைமிக்க வரலாறு உண்டு. அதை முன்னெடுத்துச் செல்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தமிழ்நாட்டு மக்களுக்கு எனது செய்தி... உங்கள் அடையாளத்தை, உங்கள் மொழியை, உங்கள் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். இந்தியக் கூட்டணிக்கு வாக்களியுங்கள். காங்கிரஸுக்கு வாக்களியுங்கள்” எனக் கூறியுள்ளார்.