காங்கிரஸ் மற்றும் மதிமுகவுக்கான தொகுதிகள் இன்று இறுதியாக வாய்ப்பு

 
tn

மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதனையடுத்து புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக மக்களவை தேர்தலை நடத்தும் பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 3வது முறையாக மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறது.

stalin

பாஜகவை ஆட்சியில் இருந்து இறக்க காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளன. தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில், காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்டு, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.  திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

selvaperunthagai

இந்நிலையில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், மதிமுக ஆகிய கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து இன்று ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது.  காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 10 தொகுதிகளில் புதுவையை தவிர்த்து மீதமுள்ள 9 தொகுதிகள் மற்றும் மதிமுகவுக்கான 1 தொகுதி எவை என்பது உறுதியாகிறது.