வீட்டிற்கு மின் இணைப்பு வராததால் மின்கம்பத்தில் ஏறிய இளைஞர் மின்சாரம் தாக்கி பலி
குடியாத்தம் அருகே வீட்டில் மின்சாரம் வராததால் மின் கம்பம் ஏறிய கல்லூரி மாணவன் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மீனூர் கொள்ளை மேடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் தமிழ் குமரன் (வயது18) குடியாத்தம் பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் இன்று இவரது வீட்டில் காலை முதல் மின்சாரம் இல்லாததது மின்வாரியத்திற்கு புகார் அளித்தோம் மின் ஊழியர்கள் சரி செய்ய வராதுதால் அருகே உள்ள கம்பத்தில் ஏறி இவர் வீட்டிற்கு வரும் மின் இணைப்பை சீரமைத்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது மின் ஊழியர்கள் துண்டித்து வைத்திருந்த மின் இணைப்பில் இணைப்பு கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த நேரம் பார்த்து மின்கம்பத்தில் சிக்கிய கல்லூரி மாணவர் துடிது எரிந்த நிலையில் கம்பத்தில் சிக்கியுள்ளார் அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இது குறித்து இவரது உறவினர்கள் குடியாத்தம் கிராமிய போலீசருக்கு தகவல் தகவல் தெரிவித்தனர் தகவலின் பெயரில் விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த கல்லூரி மாணவனின் உடலை மீட்டு உடல் கூறு ஆய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உறவினர்கள் முன்னிலையில் மின்சார துத்தி துடிகித்து போயிருந்த இந்த சம்பவம் உறவினர்கள் மத்தியிலும் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


