கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு ஒத்திவைப்பு..

 
teachers exam

அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை - அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 4 ,000 உதவிப் பேராசிரியர் காலிப்பணியிடங்களை போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருந்தது. அதன்படி மார்ச் 28 ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன.  ஆகஸ்ட் 4-ஆம் நாள் போட்டித் தேர்வுகள் நடைபெறும் எனவும்  தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக உதவி பேராசிரியர் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று அறிவித்துள்ளது. மேலும் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.  

ஆசிரியர் தேர்வு வாரியம்!!!

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் மொத்தம்  10,079 பணியிடங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 7,500 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.  கடந்த 11 ஆண்டுகளாக இந்த காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்து வந்த நிலையில் 2,331 நிரந்தர உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை 2019 ல்  வெளியிடப்பட்டது. ஆனால் நீதிமன்ற வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தேர்வுப் பணி நடைபெறாமல் போனது.  அதன் பிறகு தற்போது தான் அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர்களை நியமிக்க உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் இந்த முறையும் தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருப்பது  குறிப்பிடத்தக்கது.