கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாக சென்னையில் போராட்டம்..!

 
1

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், தேர்வு முறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த ஜூன் 20-ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அவர்களுக்கு சென்னையிலும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


டெல்லியில் நேற்று மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிரதமர் மோடி ஏன் இன்னும் மன்னிப்பு கேட்கவில்லை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார். நாட்டில் கல்வி முறையைக் கரையான் அரிப்பது போலச் சிதைத்து விட்டதாகவும், மாணவர்கள் மீதான அநீதிக்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.