வைகோவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
![tn](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded_original/11ab270a296b3d3b5f373e9662a00b57.webp)
இடது தோளில் ஏற்பட்ட காயத்திற்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
நெல்லையில் தனது கட்சியின் நிர்வாகியின் மகள் திருமணத்திற்கு செல்வதற்காக கடந்த 25ஆம் தேதி தனது சகோதரர் வீட்டில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தங்கியிருந்தார். அப்பொழுது கால் இடறி அவர் கீழே விழுந்துள்ளார். இதில் இடது தோளில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை திரும்பி அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இடது தோளில் மூன்று இடங்களில் எலும்புகள் உடைந்து இருந்த நிலையில், அதை செய்து சரி செய்ய கடந்த 29ஆம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதை தொடர்ந்து வைகோ ஓய்வு எடுத்து வருகிறார்.
அவரது உடல்நிலை குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தொலைபேசி வாயிலாக விசாரித்தனர். இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு வருகை தந்தார். அங்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார்.