நமது மாநிலத்தைப் பெருமையடையச் செய்துள்ளீர்கள் - பத்ம விருது பெற்றவர்களுக்கு முதல்வர் வாழ்த்து

 
mk Stalin biopic

குடியரசு தின விழாவை ஒட்டி 26 பேருக்கு 2023 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறையில் சாதனை படைத்தவர்களுக்கு மத்திய அரசு பத்ம விருதுகளை வழங்கி கௌரவிக்கிறது. 

central

அந்த வகையில் வயிற்றுப்போக்கு,  காலரா போன்றவற்றிற்கு தீர்வு காணும் ஓஆர்எஸ் சொல்யூஷன் கண்டுபிடித்து உலக அளவில் 5 கோடி உயிர்களை காப்பாற்றிய மேற்கு வங்காளத்தை சேர்ந்த மருத்துவர் திலிப் மஹலனபிலிஸ்க்கு  மிக உயரிய விருதான பத்மவிபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  அதேபோல விஷ தன்மை வாய்ந்த பாம்புகளை பிடித்து வரும் தமிழ்நாட்டைச் சார்ந்த வடிவேல் கோபால்,  மாசி சடையன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இருளர் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

tn

சிறந்த பாடலுக்காக ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகியுள்ள ஆர்ஆர்ஆர் படத்தின் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணிக்கு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல தமிழ்நாட்டை சேர்ந்த பின்னணி பாடகி வாணி ஜெயராமுக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட உள்ளது.


இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டில் இருந்து பத்ம பூஷண் விருதுக்குத் தேர்வாகியுள்ள பாடகி வாணி ஜெயராம், பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியுள்ள கல்யாணசுந்தரம் பிள்ளை (கலை), பாம்பு பிடி வல்லுநர்கள் வடிவேல் கோபால், மாசி சடையன் (சமூகப்பணி), பாலம் கல்யாணசுந்தரம் (சமூகப்பணி), கோபால்சாமி வேலுச்சாமி (மருத்துவம்) ஆகிய ஆறு பேருக்கும் எனது மனமகிழ் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் உயரிய விருது பெறவிருக்கும் தாங்கள் அனைவரும் தத்தம் துறைகளில் ஆற்றிய சாதனைகளால் நமது மாநிலத்தைப் பெருமையடையச் செய்துள்ளீர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.