மும்பையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார்!

 
stalin

எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மும்பை சென்றடைந்தார். 

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்துள்ளன.  ‘இந்தியா’ என பெயரிடப்பட்டுள்ள இந்தக் கூட்டணியில் முதல் 2 ஆலோசனைக் கூட்டங்கள் முறையே பீகார் மாநிலம் பாட்னா மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்றது. இந்நிலையில் இந்தியா கூட்டணி கட்சிகளின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் மும்பையில் இன்று தொடங்குகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் தேர்வு , தொகுதி பங்கீடு, கூட்டணிக்கான இலச்சினை குறித்து விவாதிக்க வாய்ப்பு இருக்கிறது.  இந்தியா கூட்டணி கட்சிகளின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் பாட்னா, பெங்களூரு தொடர்ந்து மும்பையில் இன்று தொடங்க உள்ளது . மூன்றாவது கூட்டத்தில் புதிதாக இரண்டு கட்சிகள் இணைந்துள்ளன. 

இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மும்பை சென்றடைந்தார். மும்பையில் அவருக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சரத்பவார், நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.