கோபாலபுரம் இல்லத்தில் ஸ்டாலின் ; தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார்!!

 
tn

தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கலைஞர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

tn

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற  தேர்தலில் திமுகவின் மதசார்பற்ற கூட்டணி அமோக வெற்றி பெற்றது.  இதையடுத்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றது.   முதல் முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக கடந்த ஆண்டு மே 7-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் பதவியேற்றார். அதன்படி ஸ்டாலின்  பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், பலரும் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 tn

இந்நிலையில் திமுக ஆட்சி ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்துக்கு மலர் தூவி முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.  கோபாலபுரம் இல்லத்தில் தாயார் தயாளு அம்மாளிடமும் வாழ்த்து பெற்றார் முதல்வர் ஸ்டாலின். தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்து பெற்ற முதல்வர் ஸ்டாலின்,  அண்டை வீட்டினரிடமும் வாழ்த்து பெற்றார். திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்து ஓராண்டு நிறைவு செய்துள்ள நிலையில்,  சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் தலைமைச் செயலக வடிவில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.  அதில் முதல்வராய் ஓராண்டு;  முதன்மையாய் நூறாண்டு காப்போம் என்று வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.