தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உகாதி தின வாழ்த்து

 
MK stalin letter

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உகாதி தின வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் அனைத்து திராவிட சகோதர சகோதரிகளுக்கும் எனது மகிழ்ச்சியான உகாதி தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தி திணிப்பு மற்றும் தொகுதி மறுவரையறை போன்ற வளர்ந்து வரும் மொழியியல் மற்றும் அரசியல் அச்சுறுத்தல்களை நாம் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும். 
தெற்கு ஒற்றுமைக்கான தேவை இதற்கு முன்பு இருந்ததில்லை. நாம் ஒன்றிணைந்து நமது உரிமைகள் மற்றும் அடையாளத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஒவ்வொரு முயற்சியையும் தோற்கடிக்க வேண்டும். இந்த உகாதி நம்மை ஒன்றிணைக்கும் ஒற்றுமையின் உணர்வைத் தூண்டட்டும் என குறிப்பிட்டுள்ளார்.