‘தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு’- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
இந்தியை திணித்தால் ‘தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு’ என்பதனைக் காட்ட வேண்டி வரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடலூரில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதியை நிறுத்தினாலும், திட்டங்களை தொடருவோம். சில ஆயிரம் பேர் பேசும் சமஸ்கிருதத்துக்கு ரூ.1,488 கோடி, பல கோடி பேர் பேசும் தமிழ் மொழிக்கு ரூ.74 கோடி, இது சரியா? ஒன்றிய அரசு நிதியை நிறுத்தினாலும், பள்ளிக்கல்வித்துறையின் அனைத்து திட்டங்களும் தொடரும். ஒன்றிய அரசின் கொள்கைகளால் நாம் கடைப்பிடிக்கும் சமூக நீதி கொள்கையை நீர்த்துப் போகச் செய்வது. பட்டியலின பழங்குடியின இதர பிற்படுத்தப்பட்டோருக்கு நாம் உதவித் தொகை வழங்கி வருகிறோம்.
ஆனால் ஒன்றிய அரசு கொள்கை இதை மறுக்கிறது. 3ம் வகுப்பு, 5ம் வகுப்பு எனப் பொதுத்தேர்வு வைத்துப் பிள்ளைகளை வடிகட்டப் பார்க்கிறார்கள். 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை செமஸ்டர் தேர்வு முறையைக் கொண்டுவரப் பார்க்கிறார்கள். இதனால் நம் பிள்ளைகள் விரும்பிய கல்லூரியில் விரும்பிய பாடத்தில் சேர முடியாது. 10ம் வகுப்பு முதல் பட்டயப் படிப்பு வரை உள்ள மாணவர்கள், படிப்பைத் தொடர விரும்பவில்லை என்றால் அவர்களாகவே வெளியேறலாம் என சொல்கிறார்கள். இது படிக்காமல் போ என்று சொல்வதற்கு சமம் இல்லையா? என கூறினார்.


