மாநில சுயாட்சி தொடர்பாக உயர்மட்ட குழு அமைப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

மாநில சுயாட்சிக்காக அரசியலமைப்பு சட்டத்தை ஆய்வு செய்ய உயர் மட்ட குழு அமைப்பது அவசியமாகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையி மாநில சுயாட்சி தொடர்பாக முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். ஒற்றைத் தன்மை கொண்ட நாடாக இல்லாமல் கூட்டாசி கொண்ட நாடாகதான் இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கினார்கள். மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்று திமுக தொடர்ந்து முழுங்கி வருகிறது. ராஜமன்னார் தலைமையில் உயர்மட்ட குழுவை மறைந்த முதலமைச்சர் கலைஞர் அமைத்தார். இந்த குழுவின் முக்கிய பரிந்துரைகளை இந்த சட்டப்பேரவையில் தீர்மானமாக கலைஞர் நிறைவேற்றினார். 1974-ல் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் மாநில சுயாட்சி தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன. போராடியே அனைத்தையும் பெற வேண்டியுள்ளது.
அரசியலமைப்பு சட்டத்தை ஆய்வு செய்ய வேண்டும். மாநில உரிமைகள் ஒன்றன்பின் ஒன்றாக பறிக்கப்படுகிறது. மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என தமிழகம் வலியுறுத்தி வருகிறது. அரசியலமைப்பு சட்டத்தை ஆய்வு செய்ய வேண்டும், மாநில சுயாட்சிக்காக அரசியலமைப்பு சட்டத்தை ஆய்வு செய்ய
உயர் மட்ட குழு அமைப்பது அவசியமாகிறது. மாநில பட்டியலில் இருந்து ஒத்திசைவு பட்டியலுக்கு சென்றவற்றை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற சட்ட விதிகளின்படி ஆய்வு செய்யப்படும். உயர் மட்ட குழுவில் அசோக் வரதன் செட்டி, நாகநாதன் ஆகியோர் உறுப்பினராக இருப்பார்கள். இடைக்கால அறிக்கை ஜனவரி மாதம் சமர்ப்பிக்கப்படும். மத்திய - மாநில அரசுகளின் உறவு குறித்தும், உயர்மட்ட குழு ஆராயும் என கூறினார்.