விசாரணை கைதி தங்கமணி மரணம் - சட்டப்பேரவையில் முதல்வர் அளித்த வாக்குறுதி!!

 
Stalin and eps

திருவண்ணாமலை விசாரணை கைதி உயிரிழந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

திருவண்ணாமலையில் விசாரணை கைதி உயிரிழந்தது தொடர்பாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். தீர்மானத்தின் மீது பேசிய ஈபிஎஸ் , கைதியின் மர்ம மரணம் தொடர்பாக நியாயமான விசாரணை நடத்த வேண்டும் , அத்துடன் வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

tn

இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம்  மீது பதிலளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், "திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு காவல் நிலைய சரகம், தட்டரணை
கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி என்பவர் அவரது வீட்டில் விஷச்சாராயம் வைத்திருந்ததாக திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர் கடந்த 26 4-2022 அன்று வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்து நீதித் துறை நடுவர் முன்பு ஆஜர் செய்து, அன்றையதினமே திருவண்ணாமலை கிளைச் சிறையில் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர்.

eps

இந்த நிலையில், சிறையிலிருந்த தங்கமணிக்கு ஏப்ரல் 27 அன்று உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இரவு சுமார் 7-40 மணிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தங்கமணி சிகிச்சை பலனின்றி இரவு சுமார் 8-40 மணியளவில் உயிரிழந்துள்ளார். தங்கமணியின் உடல்
அதே மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. நேற்றிரவு, நீதித் துறையினுடைய நடுவர் முன்னிலையில் உடற்கூராய்வு நடைபெற்றுள்ளது. அதன் அறிக்கை கிடைக்கப்பெற்றவுடன், உரிய விசாரணை நடத்தப்பட்டு, இந்த அவைக்குத் தெரிவிக்கப்படும் என்பதைத் தங்கள் வாயிலாக மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்" என்றார்.