அனைத்துக்கட்சி கூட்டம்...உங்கள் முடிவை மனசாட்சியுடன் மறுபரிசீலனை செய்யுங்கள் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

 
stalin

அனைத்துக்கட்சி கூட்டத்தில் அரசியல் வேறுபாடுகளை ஓரமாக வைத்துவிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் கலந்துகொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

சென்னை தலைமைச் செயலகத்தில், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், நாளை (05.02.2025) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது. அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க வருமாறு 45 அரசியல் கட்சிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், விசிக, தமிழக வெற்றி கழகம், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட 45 கட்சிகளுக்கு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உள்ளிட்டவை அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என அறிவித்துள்ளன. மற்ற கட்சிகள் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளன. 

இந்த நிலையில், அனைத்துக்கட்சி கூட்டத்தில் அரசியல் வேறுபாடுகளை ஓரமாக வைத்துவிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் கலந்துகொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தயவுசெய்து, அரசியல் வேறுபாடுகளை ஓரமாக வையுங்கள். இது தமிழ்நாட்டின் உரிமைப் பிரச்சினை. சுயநலத்துக்காக, நம்முடைய சந்ததிகளை அடகு வைத்து விடாதீர்கள். உங்கள் முடிவை மனசாட்சியுடன் மறுபரிசீலனை செய்யுங்கள்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.