1967ல் அண்ணா அமர்ந்தார், தமிழ்நாடு எழுந்தது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

 
stalin

தலைநிமிர்ந்த தமிழ்நாட்டுக்குத் தீங்கொன்று வருகுதென்றால் வேலெனப் பாய்வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். 

1967ல் அண்ணா தலைமையிலான அரசு பொறுப்பேற்றதை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவுகூர்ந்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 1967, அண்ணா அமர்ந்தார், தமிழ்நாடு எழுந்தது. தலைநிமிர்ந்த தமிழ்நாட்டுக்குத் தீங்கொன்று வருகுதென்றால் வேலெனப் பாய்வோம்! வேங்கையெனச் சீறிடுவோம்! வெற்றி வாகை தனைச் சூடிடுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.