"அறம் காக்க போராடும் பத்திரிகையாளர்களைப் போற்றும் நாள்" : முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!!

 
stalin

தேசிய பத்திரிகை தினத்தையொட்டி  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ttn

இந்திய நாட்டின் நான்காவது தூண் என்று புகழப்படுபவை  ஊடகங்கள். அந்த வகையில் தேசிய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட நவ. 16ஆம் தேதி  தேசிய பத்திரிகையாளர் தினமாக 1996-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளானது இந்தியாவில் சுதந்திரமான மற்றும் பொறுப்பானதாக பத்திரிக்கைத்துறை இருப்பதை குறிப்பதுடன்,  தொடர்ந்து அறம் தவறாது  தங்கள் பணிகளை திறம்பட செய்ய வழிவகுக்கும் வகையில் பின்பற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பதில் முக்கியப் பங்காற்றும் ஊடகம் மற்றும் தொலைக்காட்சியின் பணியினையும், சேவையையும் பாராட்டும் வகையிலேயே இத்தினம் கொண்டாடப்படுகிறது. 

ttn

இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில், "துணிவுடன் அறம் காக்க போராடும் பத்திரிகையாளர்களைப் போற்றும் நாள் இன்று! உண்மையின் பக்கம் நின்று மக்களின் குரலாய் ஒலிக்கும் ஊடகங்கள் மக்களாட்சியின் நான்காவது தூணாக விளங்குகின்றன! நேர்மையும் நெறியும் தவறாது பணியாற்றும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் #NationalPressDay வாழ்த்துகள்!" என்று குறிப்பிட்டுள்ளார்.