பழ.நெடுமாறனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 
stalin

உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறனை சந்தித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். 

உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை எடுத்து வருகின்றார். இந்த நிலையில், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக மதுரை வந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பழ.நெடுமாறனை சந்தித்தார். அவரது உடல்நிலை குறித்தும், அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார். 

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், மதுரைக்குச் சென்றிருந்தபோது, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் அய்யா பழ.நெடுமாறன் அவர்கள் உடல்நலிவுற்றிருக்கும் செய்தியறிந்து, அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்தேன். #POTA-வில் கைது செய்யப்பட்டு அவர் கடலூர் சிறைச்சாலையில் இருந்தபோது, நான் வேறொரு போராட்ட வழக்கில் அதே சிறைச்சாலையில் அடைக்கப்பட்டேன். அப்போது ஒரே பிளாக்கில் இருந்த நாங்கள் பல்வேறு உரையாடல்களில் ஈடுபட்டதை நினைவுகூர்ந்து பகிர்ந்துகொண்டோம். அய்யா பழ.நெடுமாறன் அவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.