வட இந்தியாவில் தென்னக மொழியை கற்றுத்தர சபா உள்ளதா? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

 
MK Stalin

தென்னிந்திய மாநிலங்களில் இந்தி கற்றுக் கொள்ள 6,000 மையங்களுடன் இந்தி பிரசார சபா உள்ளது, அதேபோல்  வட இந்தியாவில் தென்னக மொழி ஒன்றை கற்றுக்கொள்ளத்தர சபா உள்ளதா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனின் பிறந்தநாள் வாழ்த்தை சுட்டிக்காட்டி முரசொலியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், பாஜக நிர்வாகியான அன்பு சகோதரி தமிழிசை சௌந்தரராஜன் எனக்கு மும்மொழியில் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்துப் பதிவிட்டிருந்தார். தமிழ், ஆங்கில வாழ்த்துக்குப் பிறகு, தெலுங்கு மொழியில் வாழ்த்தியிருக்கிறார். அதில் இந்தி இடம்பெற வில்லை, அதுதான் தமிழ்நாட்டில் நிலவுகிற உணர்வின் வெளிப்பாடு. 

தமிழிசை சௌந்தரராஜன், தெலுங்கு மொழியைப் பள்ளிப் பருவத்திலேயே படித்து தெரிந்துகொள்ளவில்லை. தெலங்கானாவில் பணியாற்றியபோது கற்றுக் கொண்டார். இதிலிருந்தே மூன்றாவதாக ஒரு மொழியை வலிந்து படிக்க வேண்டியதில்லை என்பதையும், தேவைப்படுகிறவர்கள் புரிந்து கொண்டு பயன்படுத்த முடியும் என்பதையும் பிறந்த நாள் வாழ்த்துப்பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார் சகோதரி தமிழிசை. அவருக்கு என் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.