சாலை விபத்தில் உயிரிழந்த செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சி மன்ற தலைவர் - முதலமைச்சர் இரங்கல்

சாலை விபத்தில் உயிரிழந்த செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சி மன்ற தலைவர் கருப்பசாமி குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், விருதுநகர் மாவட்டம், செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சி மன்ற தலைவர் திரு. கருப்பசாமி அவர்களும், கிருஷ்ணபேரி ஊராட்சி மன்றத் தலைவரான திருமதி. வினோதினி அவர்களின் கணவரான திரு. அபிமன்னன் அவர்களும், ஊரக வளர்ச்சி இயக்குநர் அவர்களைச் சந்தித்து மனு கொடுக்கச் சென்னைக்குக் காரில் சென்று கொண்டிருந்த போது, மணப்பாறை அருகே ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தனர் என்ற துயரச் செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன். திரு. கருப்பசாமி மற்றும் திரு. அபிமன்னன் ஆகியோரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும் அப்பகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/BFBQ5DxVsF
— TN DIPR (@TNDIPRNEWS) August 31, 2023
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/BFBQ5DxVsF
— TN DIPR (@TNDIPRNEWS) August 31, 2023
மேலும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் திரு. கோமதி சங்கர் (நடுவப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. பாண்டிச்செல்வியின் கணவர்) அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கவும் அறிவுறுத்தியுள்ளேன். விபத்தில் காயமடைந்தோர் அனைவரும் விரைவில் நலம்பெற விழைகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.