அதிமுக – திமுகவினரிடையே மோதல்! எம்.எல்.ஏ மீது போலீசார் தடியடி

 

அதிமுக – திமுகவினரிடையே மோதல்! எம்.எல்.ஏ மீது போலீசார் தடியடி

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அதிமுக எம்எல்ஏ சின்னப்பன் மீது போலீசார் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவிலிருந்து அண்மையில் விலகி திமுகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் தலைமையில் விளாத்திக்குளத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது. அப்போது அங்கு வந்த விளாத்திகுளம் அதிமுக எம்எல்ஏ சின்னப்பன் தலைமையிலான அதிமுகவினர், கொடியேற்றும் பகுதிக்கு வருகை தந்து பிரச்னையில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அதிமுக – திமுகவினரிடையே மோதல்! எம்.எல்.ஏ மீது போலீசார் தடியடி

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் இரு கட்சியினரின் மோதலையும் நிறுத்த தடியடி நடத்தினர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அதிமுக எம்எல்ஏ சின்னப்பன் மீது போலீசார் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் காவல்துறையை கண்டித்து அதிமுகவின் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்.