நாளை சீன வெளியுறவுத்துறை மந்திரி இந்தியா வருகை..!

 
1 1

அமெரிக்க அதிபரின் வரிவிதிப்பு நடவடிக்கைகள், தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை மேற்கோள் காட்டி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு அரிய வகை தனிமங்களின் ஏற்றுமதிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் போக்குவரத்து உபகரணங்கள் முதல் மின்னணுவியல் உற்பத்தி துறைக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி, வரும் 18-ந்தேதி(திங்கட்கிழமை) இந்தியாவிற்கு வருகை தர உள்ளார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இரு நாடுகளும் வர்த்தக ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராயவும், பதற்றத்தை தணிக்கவும் முயன்று வரும் சூழலில், சீன வெளியுறவுத்துறை மந்திரி இந்தியாவிற்கு வருகை தருவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பயணமாக பார்க்கப்படுகிறது. 

கால்வான் பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து இரு நாடுகளின் உறவு முன் எப்போதும் இல்லாத வகையில் பாதிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக இந்தியா-சீனா இடையேயான எல்லை வழி வர்த்தகம் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது