“இந்த கால திரைப்படங்கள் பார்த்தால் பிள்ளைகள் கெட்டுப்போய் விடுவார்கள்” : அமைச்சர் செல்லூர் ராஜு
தடம் மாறாமல் நேர்வழியில் செல்ல அந்த கால திரைப்படங்கள் உதவின என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
அன்றைக்கு திரைப்படங்கள் பார்த்து தான் நல்ல குழந்தைகள் உருவானார்கள். இன்றைக்கு திரைப்படங்கள் பார்த்தால் பிள்ளைகள் கெட்டுப் போய்விடுவார்கள் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் எஸ்.பி.பி மறைவு குறித்தும் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அவர் அம்மாவின் அன்பையும் ஆசியையும் பெற்றவர். அம்மா மீது பொய்வழக்கு போட்டபோதெல்லாம் ஆறுதல் கூறியவர் என்று கண்டமேனிக்கு உளறி கொட்டினார். உடனே உடனிருந்தவர்கள் இறந்தது பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம், எம்பி எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் இல்லை என்று கூற சுதாரித்து கொண்டார் செல்லூர் ராஜூ.
பின்னர் பாடகர் எஸ்.பி.பி சிறந்த பாடகர். லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயத்தை தனது இனிய குரலால் கட்டிப்போட்டவர். அவரின் மறைவுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது என்று கூறி அங்கிருந்து சென்றார்.