கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி- பள்ளி தாளாளர் உள்ளிட 3 பேர் கைது
விக்கிரவாண்டி சென்மேரிஸ் பள்ளியில் எல்கேஜி குழந்தை பள்ளி கழிவு தொட்டியில் விழுந்து இறந்த வழக்கில் பள்ளி தாளாளர் உள்ளிட 3 பேர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள சென்மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று கழிவறைக்குச் சென்ற எல்கேஜி மாணவி கழிப்பிட தொட்டியில் விழுந்து உயிரிழந்தார். இது தொடர்பாக அவரின் பெற்றோர் பழனிவேல், சந்தேக மரணம் என விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் விக்கிரவாண்டி காவல் நிலைய காவல்துறையினர் சந்தேகம் மரணம், பணியில் அஜாகரத்தையாக இருப்பது ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டோம்னிக் மேரி, வகுப்பு ஆசிரியர் ஏஞ்சல்ஸ், மூவரையும் நள்ளிரவு 2 மணிக்கு கைது செய்து விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.
குழந்தையின் உடல் இன்று காலை முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. மேலும் நேற்று பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர்கள் அப்பகுதி மக்கள் போராட்டம் செய்து வந்த நிலையில் இன்று பள்ளிக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.